Wednesday, January 28, 2009

நான் கடவுள் தயார்--- பிப்ரவரி 6

துவக்கம்னு ஒன்னு இருந்தா, முடிவுன்னு ஒன்னு இருக்குமல்லவா? நான் கடவுள் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு பண்ணிட்டாங்களாம். பிப்ரவரி ஆறாம் தேதி மக்களை சந்திக்க வருகிறார் கடவுள்.

சென்சார் சர்டிபிகேட் வாங்கிய பிறகும் படத்தை செதுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள் இளையராஜாவும், பாலாவும். ஆடியோ வெளியான பிறகும் கூட 'இந்த இடத்திலே ஒரு பாடலை வச்சுக்கலாமே' என்று மேலும் ஒரு பாடலை போட்டு கொடுத்திருக்கிறார் இசைஞானி. அந்தளவுக்கு படத்தோடு ஒன்றிப் போயிருக்கிறார்கள் இருவரும்.

எந்த படத்திற்கும் இத்தனை நாட்கள் பின்னணி இசைக்காக எடுத்துக் கொண்டதில்லையாம் இளையராஜா. இந்த படத்திற்காக அதையும் செய்திருக்கிறார். இரண்டு க்ளைமாக்ஸ்கள் எடுக்கப்பட்டு அதில் எதை சேர்ப்பது? எதை விடுப்பது என்ற குழப்பத்திலிருந்த பாலா, அதிலும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். நாம் பார்க்கப் போவது வில்லனை அடித்து புரட்டி கடைசியில் அவனையே மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடும் 'அகோரி' என்கிற அசுரத் தனத்தைதான்! இரண்டு க்ளைமாக்சுகளுக்கும் சென்சார் சர்டிபிகேட் வாங்கி வைத்திருக்கிறாராம் பாலா.

ரிலீஸ் தேதியான ஆறு, தமிழ்சினிமாவுக்கே ஆறுதல் தரும்படி இருக்க வேண்டும்

No comments:

Post a Comment